தமிழக செய்திகள்

'மீன் குழம்பில் மீன் இல்லை ' - ஓட்டலில் கலாட்டா...!

திருவள்ளுரில் சாப்பிட வந்த நபர் மீன் குழம்பில் மீன் இல்லாததால் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் உணவு சாப்பிட ஒரு நபர் வந்துள்ளார். அவர் சாப்பாடு ஆர்டர் செய்து விட்டு ஊழியரிடம் மீன் குழம்பு எடுத்துவர கூறியிருக்கிறார்.

ஊழியர் மீன் குழம்பு கொண்டு வைத்துள்ளார்.அதை பார்த்த அந்த நபர் அவரிடம் 'மீன் குழம்பு இருக்கு அதில் ஏன் மீன் இல்லை' எனக் கேட்டு ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது அந்த ஊழியர் நீண்ட நேரம் ஆனதால் குழம்பு மீன் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதற்கு குடிபோதையில் இருந்த நபர் 'நான் பணம் கொடுத்து சாப்பிடுகிறேனே என்ன நல்லா கவனிக்க கூடாதா ' என கேட்டு அவர் ஓட்டல் ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்