தமிழக செய்திகள்

பா.ஜனதாவில் தொடரும் எண்ணம் இல்லை - திருச்சி சூர்யா

பா.ஜனதாவில் தொடரும் எண்ணம் இனியும் இல்லை என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருச்சி,

தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என் தலைவர் குறித்து பேசியதற்கு நான் பதில் அளித்தேன். அதற்கு, நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். தமிழக பா.ஜனதாவில் பயணிக்கும் எண்ணம் இனியும் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை