தமிழக செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தனி அமைச்சகம் - பிரதமருக்கு வடசென்னை எம்.பி. மீண்டும் கடிதம்

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலன்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கலாநிதி வீராசாமி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'சுமார் 3.2 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், அவற்றில் பல லட்சம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

அவர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் நமது அந்நிய செலாவணி கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்குச் சென்று வாழும் தமிழர்களின் நலன் காக்க ஒரு வாரியத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.

எனவே அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்ப நலன்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் ' என பிரதமரிடம் கலாநிதி வீராசாமி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு