தமிழக செய்திகள்

கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்

கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை கிராஸ்கட் சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, வந்த மர்மநபர் ஒருவர், ரிங்கு குமார் என்ற தொழிலாளியின் சட்டைப் பையில் இருந்து செல்போனை திருட முயன்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக் கொண்டு விழித்த ரிங்கு குமாரை, அந்த மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து ரிங்கு குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி