தமிழக செய்திகள்

கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2021-22 ஆம் கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஆகஸ்ட் 23) முதல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பத்தை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவு செய்யலாம் என்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதோர் கல்லூரி உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 60 ரூபாயும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தாமல் பதிவு கட்டணம் 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போது என்று கல்லூரிக் கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு