தமிழக செய்திகள்

கடைகளில் அதிகாரிகள் சோதனை:கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்

போடி பகுதியில் கடைகளில் இருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

போடி பகுதியில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் உத்தரவின், பேரில் போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா தலைமையில் அதிகாரிகள் போடி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் உள்ள மீன் கடைகளில் இந்த சோதனை நடந்தது. அப்போது 3 கடைகளில் கெட்டுப்போன மீன்கள் இறைச்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 30 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு