தமிழக செய்திகள்

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தியது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.