தமிழக செய்திகள்

கனியாமூர் தனியார் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் ,நடந்த போராட்டத்தின் போது கலவரத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியது மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர்.சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் டு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது . இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று ஆர்டிஓ, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பள்ளியை திறப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்ததை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு