தமிழக செய்திகள்

சென்னை பர்மா பஜாரில் வாடகை பாக்கி செலுத்தாத 45 கடைகளுக்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை

வாடகை பாக்கி வைத்துள்ள 45 கடைகளுக்கு முதற்கட்டமாக இன்று சீல் வைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விட்டுள்ளது. இதில் 375 கடைகளைச் சேர்ந்த வியாபாரிகள் சுமார் 75 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 25 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 45 கடைகளுக்கு முதற்கட்டமாக இன்று சீல் வைக்கப்பட்டது. மீதம் உள்ள 330 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பர்மா பஜாரில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் மாதம் தோறும் ரூ.1,100 வாடகை வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து