கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கருமலைசாமி (65 வயது) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கருமலைசாமி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த கேர்ட்டு, கருமலைசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்டசிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கேர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து