தமிழக செய்திகள்

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் தனது வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.