திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் ஆதிதிராவிடர் புதுத் தெருவை சேர்ந்தவா ராமாயி (வயது78). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்த இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டின் பின் புறம் இருந்த பூவரசு மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.