தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலி

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 55 வயது முதியவர் பலியாகி உள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் கொரோனா வார்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். அந்த முதியவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல்படி, முதியவரின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.