தமிழக செய்திகள்

கார் மீதுமோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்

போடி அருகே கார் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர்கள் காவியன் (வயது 20), பிரவீன்குமார் (17). நேற்று முன்தினம் இவர்கள் தங்களது நண்பர்கள் 2 பேருடன் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சூரியநெல்லி பகுதிக்கு மோட்டார்சைக்கிள்களில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து 2 மோட்டார்சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர். போடிமெட்டு மலைப்பாதையில் புலியூத்து என்ற இடத்திற்கு மேலே சென்றபோது, எதிரே வந்த கார் மீது பிரவீன்குமார் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பிரவீன்குமார், காவியன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது