தமிழக செய்திகள்

பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம்,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பங்காரு அடிகளார் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.  

SCROLL FOR NEXT