தமிழக செய்திகள்

தசரா விழாவை முன்னிட்டுபாலக்காடு எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை

தசரா விழாவை முன்னிட்டு பாலக்காடு எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளரும், தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான மா.பிரமநாயகம் சென்னை ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆகையால் நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரெயிலை விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 2 ரெயில்களுக்கும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து