தமிழக செய்திகள்

உலக ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தையொட்டி தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக ஓசோன் தினத்தையொட்டி தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்று நடும் விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் காயத்ரி, பட்டிமன்ற பேச்சாளர் மாரிமுத்து, திண்ணை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு