சென்னை,
இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 254-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒண்டி வீரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஒண்டி வீரனின் உருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.