தமிழக செய்திகள்

ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன்

மார்ச் 2-ஆம் தேதி திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கு மக்கள் முன்வர வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பவுர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.