தமிழக செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறயினர் இணைந்து கரூ அரசு காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா. அப்பாது அரசு காலனி தங்கராஜ் நகரில் பாஸ்கர் என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதன்பால் அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்து, குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வுத் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.