தமிழக செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது..!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை (வியாழக்கிழமை) சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. ஆன்லைன் தடை சட்ட மசோதாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.

நீதியரசர் சந்துரு குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையிலேயே மீண்டும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தடைச் சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அதற்கு அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து