தமிழக செய்திகள்

சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் இருந்து சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நெல்லை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 18-ந் தேதி சிவராத்திரி மகாபிரதோஷத்தன்று நெல்லை, சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் இரவு 8 மணிக்கு புறப்பட்டு பஞ்சபூத சிவன் கோவில்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவிலுக்கு சென்று விட்டு காலை 6 மணிக்கு வந்து சேருகிறது. இதற்கான கட்டணம் நெல்லையில் இருந்து 300 ரூபாய், சங்கரன்கோவிலில் இருந்து 200 ரூபாய்.

இதேபோல் நெல்லை பஸ்நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு நவகைலாய சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு காலை 6 மணிக்கு வருவதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டடம் ரூ.600. இந்த பஸ்களுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...