தமிழக செய்திகள்

தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு

தியாகராயநகரில் பெயிண்டரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்து கும்பல் தப்பி சென்றனர்.

தினத்தந்தி

சென்னை தியாகராயநகர் ஆர்.பி.கார்டன் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 42). பெயிண்டர். இவர் தன்னுடன் வேலைப் பார்க்கும் கமலாதேவி என்ற பெண்ணுடன் தியாகராயநகர் சுரங்கப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கமலாதேவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்தனர்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமாரின் செல்போனை கேட்டனர். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்த கும்பல் அவரை கத்தியால் வெட்டி அவரது செல்போனை பறித்து தப்பி சென்றது. இதில் காயமடைந்த முத்துக்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கமலாதேவி பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்