தமிழக செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு பாலாபிஷேகம்

மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு பாலாபிஷேகம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொம்மி அம்பாள் சமேத முதிஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மகாசிவராத்திரியை முன்னிட்டு 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு கிரேன் மூலம் 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூலவருக்கு விடிய, விடிய நான்கு கால பூஜை, பால், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. மேலும் கோவில் வளாகங்களில் தேவார இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பள்ளி மாணவிகளைக் கொண்டு பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து