தமிழக செய்திகள்

தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழா நிறைவு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா நிறைவடைந்தது.

கொரடாச்சேரி:

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா நிறைவடைந்தது.

தியாகராஜர் கேவில்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி திருவிழா 55 நாட்கள் நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1-ந் தேதி திருவாரூர் ஆழி தேரோட்டம் நடந்தது.

நேற்று பங்குனிஉத்திர பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை முன்னிட்டு கொடி இறக்கம் மற்றும் கோவில் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

கொடி இறக்கம் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து சந்திரசேகரர் மற்றும் ஆதி சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கொடி இறக்கப்பட்டது.

தொடர்ந்து ஆச்சாரியார்கள் கொடியினை தோளில் சுமந்து சென்று கோவில் மண்டபத்தில் வைத்தனர். அதை அடுத்து கோவில் ஆச்சாரியார்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு