தமிழக செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.

தினத்தந்தி

கல்லிடைக்குறிச்சி ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர்பாரூக், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கேரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு, ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.

மதுரை ரெயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரெயில் நிலையங்களில் 22ம் இடத்தில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு