தமிழக செய்திகள்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடை பெறும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சுரங்கப்பாதை

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, திருத்தணி, அரக்கோணம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லாத காரணத்தால் அடிக்கடி ரெயில் மோதி உயிர் இழப்புகள் நடந்து வந்தன.

இதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

விரைந்து முடிக்க கோரிக்கை

சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தல் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

எனவே பணியை அனைத்து வசதிகளுடன் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து