தமிழக செய்திகள்

மின்சார ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி

இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர், நுங்கம்பாக்கம், கேடம்பாக்கம், தியாகராயநகர் வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவையை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் நேரத்தில் இருந்து 5 முதல் 10 நிமிடங்கள் தாமதமாக வருவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரெயில்கள் தாமதமாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

ரெயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லக் கூடியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரெயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்