தமிழக செய்திகள்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது: டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரெயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிக்கெட் முன் பதிவு செய்வதில் சிக்கல் என ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சினையை விரைந்து  சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்