கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி
கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்த கஜா புயல், தமிழகத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல்-மழைக்கு 49 பேர் பலி ஆனார்கள்.
சென்னை,
வங்க கடலில் கடந்த 11-ந் தேதி உருவாகி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருந்த கஜா புயல், நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.