தமிழக செய்திகள்

பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது

தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக பாஸ்போர்ட் இணையதள சேவை ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் 2-ம் தேதி (இன்று) காலை 6 மணி வரை செயல்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த 5 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 5 நாட்களாக முடக்கி வைக்கப்பட்ட பாஸ்போர்ட் இணையதள சேவை இன்று சீரானது. காலை 6 மணி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நேர்காணலுக்கு திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது