தமிழக செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள் - பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றபடி பரனூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றன.

தினத்தந்தி

சென்னை,

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் இருந்ததால், விடுமுறையை கொண்டாட சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அவ்வாறு செல்பவர்களுக்காக தமிழக போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றபடி, சுங்கச்சாவடியை கடந்து சென்றன. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்