தமிழக செய்திகள்

சென்னையில் மக்கள் குறைதீர் முகாம்....618 புகார்களுக்கு தீர்வு

மற்ற புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னையில் முதல்முறையாக பெருநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவிப்பின் அடிப்படையில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி. கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், தி.நகர், புனித தோமையர் மலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

முகாமில் பெறப்பட்ட ஆயிரத்து 2 புகார்களில் 618 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், மற்ற புகார்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா