தமிழக செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனுக்களை வழங்கினர்.

இதில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் திருப்தி அடையாத 19 மனுதாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் உத்தரவிட்டார். முகாமில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து