தமிழக செய்திகள்

பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம்: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ்-2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினத்தந்தி

கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் 8-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்ட தேர்ச்சி சதவீதம் 97.95 ஆகும். இதன்படி கடந்த 2020-ம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 2.55 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் முதன் முறையாக மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது ஆசிரியர்கள், மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 8-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு பெரம்பலூர் முன்னேறியதற்கு மாணவர்களையும் அரும்பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியையும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டியதோடு, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை கூறி பகிர்ந்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு