தமிழக செய்திகள்

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கோவை,

கோவையை அடுத்த வெள்ளலூரில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 8-ந் தேதி இரவு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நள்ளிரவில் 2 பேர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது.

அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்தது இந்து முன்னணியை சேர்ந்த அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்