தமிழக செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

பழனியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

பழனி ஒன்றிய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், பழனி தாலுகா அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. பழனியில் வீடு இன்றி வாடகை வீடுகளில் வசித்து வரும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பிச்சைமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், பொதுமக்கள், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனிசாமியை சந்தித்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை கொடுத்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து