தொண்டி
திருவாடானை தாலுகா வெள்ளையபுரம் அருகே உள்ள புலியூர் கிராமத்தில் ஒரு கடையில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சோதனையிட்டுள்ளார். அப்போது அங்கு அரசு அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக பெட்ரோல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து ஒரு கேனில் இருந்த 20 லிட்டர் பெட்ரோலை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி(வயது 47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.