சேலம்:
வாழப்பாடி கோட்டம் பேளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாள (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பொலப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், ரெங்கனூர், கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி, கோனஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.