தமிழக செய்திகள்

சிலால் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க திட்டம்

சிலால் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அய்யனார் வளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.-

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் சிலால், அங்கராயநல்லூர், அணைக்குடம், தேவமங்கலம், நாயகனை பிரியாள், வானத்திரையன்பட்டினம், பிலிச்சிகுழி ஆகிய கிராமங்களில் நிறைவான மின் அழுத்தம் அளிக்கும் பொருட்டு சிலால் கிராமத்தை மையமாகக் கொண்டு சிலால் நான்கு ரோட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் துணை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிலம் 1.5 ஏக்கர் (60 மீட்டருக்கு 80 மீட்டர்) அரசு நில வழிகாட்டி மதிப்பில் கையகப்படுத்த தேடப்பட்டு வருவதால், பொதுமக்களின் நலன் கருதி அரசு நில வழிகாட்டி மதிப்பில் அளிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு