தமிழக செய்திகள்

அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி

அருப்புக்கோட்டையில் மத நல்லிணக்க உறுதிமொழி நடைபெற்றது.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு நகர பொறுப்பாளர் தஸ்தகீர் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள் மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தாமஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் காத்த முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்