தமிழக செய்திகள்

பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்; அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல்

பிளஸ் 2 செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என அரசு தேர்வு துறை இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக அரசு தேர்வு துறை பணியாளர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற 1ந்தேதி முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

ஆசிரியர்கள், தேர்வுத்துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் செய்முறை தேர்வில் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏற்கனவே அறிவித்த நாட்களில் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்