தமிழக செய்திகள்

பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த பிளஸ்-2 மாணவர்கள்

பள்ளி வகுப்பறையை பிளஸ்-2 மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

தினத்தந்தி

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் தேர்வு முடிந்த பின்னர், தங்களது வகுப்பறையில் அமரும் இருக்கைகள் உள்ளிட்டவற்றை உடைத்து சேட்டையில் ஈடுபட்டு செல்லும் நிகழ்வுகள் நடக்கின்றன. அவ்வாறு இல்லாமல் பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 கணித பிரிவு வகுப்பு மாணவர்கள் 28 பேர் நேற்று முன்தினம் தங்களுக்கு தேர்வு முடிந்தாலும், நேற்று தாங்கள் பயின்ற பள்ளிக்கு வருகை தந்து தங்களது வகுப்பறையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் அவர்கள் கரும்பலகைக்கு வண்ணம் பூசி, வகுப்பறை சுவருக்கு வர்ணம் தீட்டினர். மேலும் அவர்கள் தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை மாட்டி விட்டு சென்றனர். அந்த மாணவர்களின் செயலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரமும் பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு