தமிழக செய்திகள்

முழுஅடைப்பு போராட்டம் எதிரொலி:முன்னெச்சரிக்கையாக பா.ம.க.வினர் 252 பேர் கைது

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக பா.ம.க.வினர் 252 பேர் கைது செய்யப்பட்டனா.

தினத்தந்தி

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 55 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, மந்தாரக்குப்பம், வடலூர், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் நேற்று காலை ஒன்று திரண்டது மற்றும் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்தியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக கூறி பா.ம.க.வினர் 197 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பா.ம.க.வினர் 252 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு