தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்து உள்ளது.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாரப்பத்தி அருகே சுமார் 3 வயது மதிக்கதக்க ஒரு ஆண் புள்ளிமான் இன்று காலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் திடீரென்று புள்ளிமான் மீது மோதியது.

அதில் தலையில் பலத்த காயமடைந்த மான் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை புதூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு