தமிழக செய்திகள்

ஓசூர் பகுதியில்ஜாமீன் பெற்று கோர்ட்டில் ஆஜராகாத 9 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளவர்களை உத்தனப்பள்ளி, பேரிகை, பாகலூர், சிப்காட், ஓசூர் அட்கோ போலீசார் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஓசூர் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஜாமீன் பெற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நிபந்தனை ஜாமீன் பெற்று கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வரும் 9 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது