தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை,

சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வருகிற 15-ந்தேதி அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.