தமிழக செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காட்பாடி வழியாக செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில்களில் பயணிக்க வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் எடுத்துச் செல்லும் உடமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்கின்றனர்.

காட்பாடி ரெயில் நிலைய வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் தீவிரமாக கண்காணிக்க ப்படுகிறது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்