தமிழக செய்திகள்

போலீசார் -மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம்

போலீசார் -மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சிந்தாமணிக்காடு மீனவ கிராமத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் பேசியபோது, 'கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்றங்களுக்கும் மீனவர்கள் துணைபோக கூடாது. குற்றங்கள் மற்றும் கடத்தல் குறித்தும், அன்னியர்கள் நடமாட்டம் குறித்தும் உரிய நேரத்தில் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்ல வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது' என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்