தமிழக செய்திகள்

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல், 2017-ல் காவல்துறை பணிக்கு தேர்வானார்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார். இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளையில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் கைரேகை தடயம் மூலம் ஏட்டு கற்குவேல் சிக்கினார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அமைந்துள்ள இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்